கோவையில் தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் தொழிலதிபரிடம் 2.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் இன்று 60 பக்க குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. 

கோவையில் கடந்த 2011ம் ஆண்டு தொழிலதிபர் ராஜவேல் என்பவருக்கு கர்நாடக மாநிலத்தில் டெண்டர் எடுத்துக்கொடுப்பதாக கூறி 2.40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திர சேகர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாமல் சுகேஷ் சந்திரசேகர் தலைமறைவானார். அவரது தந்தை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். 

இந்நிலையில் முடக்கப்பட்ட அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக பணம் பெற்ற வழக்கில் சுகேஷ் தில்லியில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோவை நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்ற காவல் நீட்டிப்பிற்காக தில்லி காவல் துறையினர் கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சுகேஷ் சந்திரசேகரின் தந்தை சந்திரசேகரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீடித்து நீதிபதி நம்பிராஜன் உத்திரவிட்டார். மேலும் இன்று சுகேஷ் சந்திரசேகர் மற்றும் சந்திரசேகர் இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகலை வழங்கவும் உத்திரவிட்டார். இதனையடுத்து இருவரும் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகரை தில்லி காவல் துறையினர் ரயில் மூலம் தில்லிக்கு அழைத்துசென்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...