ஜிஎஸ்டி வரியால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்- நீலகிரியில் தமாகா தலைவர் பேட்டி


நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. குன்னூர்  நகர தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். 

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக வட்டாரத்தில் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. மர்மமான முறையிலும் தற்கொலைகள் நடைபெறுவதால் இதனை சிபிஜ விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரியினால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு, ஜவுளி, ஓட்டல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அனைத்து மக்களிடையே கருத்து கேட்க வேண்டும்' என தெரிவித்தார்.

இதில் குன்னூர் நகர தலைவர் ஆனந்த குமார், மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...