கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக கோவையில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்- கைது

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் இரு நாட்களுக்கு முன்பு எண்ணெய் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து அதில் தீபற்றியும் எரியத்துவங்கியது.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் உடனடியாக கதிராமங்கலத்தில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி-யின் குழாய்களை அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மக்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து பொதுமக்களின் மீது காவல்துறையினரால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்ட தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கண்மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு பணத்திற்காகவும், பதவிக்காகவும் மத்திய அரசிடம் பணிந்து செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மத்திய அரசு மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும். எதை பயன்படுத்த வேண்டும் என அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறித்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.



கதிராமங்கலம் மக்கள் மீது காவல்துறையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழக அரசே. கதிராமங்கலத்தில் போராடிய ஜெயராமன் போன்றோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...