கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்யக்கூடாது- ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்


கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் ஜலேந்தரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 60-க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இதுநாள் வரையில் அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை. இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் உடல் நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்தார். ஆனால், கோவை மாநகராட்சி சார்பில் அந்த நபரின் குடும்பத்திற்கு உக்கடம் பகுதியில் தொழில் துவங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் வழங்காத அரசு, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கும் எவ்வித நிவாரணமும் வழங்க கூடாது'. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...