கதிராமங்கலம் மக்கள் மீதான தடியடிக்கு தமிழக முதலமைச்சரின் பதில் பொறுப்பற்றதாக உள்ளது- நாம் தமிழர் சீமான்


கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



கதிராமங்கலத்தில் போராடிய பொது மக்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் பதில் பொறுப்பற்றதாக உள்ளது. வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடும் மக்களுக்கு அரசு துணை நிற்காமல் நேர் எதிராக செயல்படுகின்றது. கதிராமங்கலத்திற்குள் தங்களை நுழைய விடவில்லை என்றாலும் மற்ற இடங்களில் நாங்கள் போராடுவோம். பொது கூட்டங்களில் இதுகுறித்தான கோரிக்கைகளை முன்வைப்போம்.

ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டு வேலை நிறுத்தம் மேற்கொண்டு வரும் திரையரங்க உரிமையாளர்களின் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிடிஎச் மூலம் திரைப்படங்களை  தமிழக அரசே முன்நின்று வெளியிட வேண்டும். டிடிஎச் மூலம் படங்கள் வெளியிட்டால் அதில் பல முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது. ஏற்கனவே இயக்குனர் சேரன் முயற்சித்தும் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

கொடநாட்டில் நடைபெறும் சம்பவங்கள் திகில் படம் போல் போய்க்கொண்டு இருக்கிறது. பத்திரிகைகளில் படிக்க சுவாரஷ்யமாக இருக்கிறது. மேலும், ஜெயலலிதா இருந்த போது இருந்ததை விட தற்போது தமிழக அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்னர். பொது வெளியில் தைரியமாக பேசுகின்றனர்."

இவ்வாறு நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...