மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் மக்கள் தரையில் அமர வேண்டிய அவலம்

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்து வருகின்றனர். இதனால், திங்கட்கிழமைகளில் எப்போதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பகவே காணப்படுகிறது.



பாலூட்டும் அறை:-

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பச்சிளங்குழந்தைகளுடன் மனு அளிக்கவரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்குக் கூட ஒதுக்குப்புறமாக ஓர் இடம் இல்லாமல் தவித்து வருவதாக சமீபத்தில் 'சிம்ப்ளிசிட்டி' -யில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. 



புதிய ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டும், இதுவரை பாலூட்டும் அறை அமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இந்த நிலையில், குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரளான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் எதுவும் இல்லாமல் தரையில் வெகு நேரம் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது.



தண்ணீர் வசதி, வீடு, பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி வருவோரை இப்படி தரையில் அமர்த்தி காத்திருக்கச்செய்வது முறையோ என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...