குன்னூரில் கன மழை - விவசாயம் அதிகரிக்கும் என மக்கள் மகிழ்ச்சி

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை தொடக்கத்தின் காரணமாக பரவலாக இரவு, பகல் என மழை பெய்து வருகிறது. 

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் மழை பெய்யத் துவங்கியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து, குன்னூர் பகுதிவாசி ரவி என்பவர் கூறுகையில், குன்னூருக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் அதிகப்படியாக காய்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பெய்யும் பருவமழை விவசாயம் செழிக்க மிகவும் அவசியமாகும். மழையின் காரணமாக விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது. ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...