புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரத்தினபுரி பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை இரத்தினபுரி பகுதி 7ம் நெம்பர் பாலம் அருகே 1554-ம் எண் கொண்ட டாஸ்மாக் கடையும், புது பாலம் அருகே 1552 எண் கொண்ட இரண்டு மதுபான கடைகள் இயங்கி வரும் நிலையில் சுண்ணாம்பு கால்வாய் அருகில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மீனா லோகு தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இரத்தினபுரி பகுதி கொலை, கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக உள்ளது. மேலும் இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் மதுபான கடையை அச்சத்துடன் தாண்டி செல்லும் நிலையே உள்ளது. தற்போது புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான கடை முன்னாள் மேயருக்கு சொந்தமானது.  ஏற்கனவே அப்பகுதியில் அமைந்துள்ள 2 மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் 3-வதாக மேலும் ஒரு கடை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது.

இவ்வாறு இரத்தினபுரி மக்கள் தெரிவித்னர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...