நீர் தேக்கத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தபெதிக-வினர் மனு

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே உள்ள நீர்த்தேக்கக் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில் கட்ட முயற்சிப்பதாக இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக, அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை-சத்தி சாலையில் சரவணம்பட்டி அருகே அமைந்துள்ளது வண்ணன் குட்டை. இந்த குட்டை கடந்த 80 ஆண்டுகாலமாக அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. சமீபகாலமாக கோவையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வண்ணன் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிலர் கோவில்கட்டும் பணியை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். தொடர்ந்து, இந்த பணிகள் நடைபெற்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...