அதிமுக-வின் மூன்று குழுவினரும் பாஜக-வை ஆதரிப்பதில் மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர்- சிபிஐஎம் ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுகவில் உள்ள மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜக-வை ஆதரிப்பதில் நிலவும் போட்டியில், தமிழக மக்களின் நலனை பாதுகாக்க தவறிவிட்டனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, டவுன்ஹால் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கதிராமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். சம்மந்தப்பட்ட காவல்துறைனர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜிஎஸ்டி-யினால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி கார்பரேட்களுக்கு சாதகமாக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாகும். 

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜகவை ஆதரிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இதில் தமிழக மக்களின் நலனை பாதுகாக்க அதிமுக ஆட்சி தவறிவிட்டது. 

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் வெறுப்பு பிரச்சாரமே காரணம். சிபிஎம் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சங்பரிவார் அமைப்புகளே ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். 

மேலும், பொய்யான கருத்துக்களை பரப்பி மத மோதல்களை உருவாக்க சங்பரிவார் அமைப்புகள் முயற்சித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். லோக் ஆயுக்தா மசோதாவை இயற்ற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயை பெற தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்" இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...