ஜி.எஸ்.டி. வரியால் தமிழக தியேட்டர்கள் ஸ்ட்ரைக்?

மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரிக்கொள்கையால் தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 30 சதவிதத்தை வரியாக தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வரிவிதிப்பு கொள்கையால், தியேட்டர் உரிமையாளர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிக்கொள்கையின் படி தியேட்டர் உரிமையாளர்கள் கட்டணத்தில் இருந்து 18 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். டிக்கெட்டுகளின் விலை 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் 28 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழக வரி உட்பட 58 சதவிகித வரியை தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சினிமா டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தியேட்டரில் படம் பார்க்க செல்வோர் சுமார் 170 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி படம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், இன்று நடந்த தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் வரும் 3ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டதாக கூறடுகிறது. இந்த வேலை நிறுத்த போரட்டத்தால் தமிழகத்தில் பல திரையரங்குகளில் திரைபடம் திரையிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...