ஓசை அமைப்பு சார்பில் 38 பயிற்சி வனவர்களுக்கு கோவையில் பயிற்சி முகாம்


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை அமைப்பானது சுற்றுச்சூழல் குறித்தான பல்வேறு பிரச்சனைகளில் பங்கேற்று சீரமைத்து வருகிறது. இந்நிலையில், ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது தலைமையில் இந்திய அளவில் இருந்து கோவை வந்த 38 பயிற்சி வனவர்களுக்கு மரம் மறுநடவு குறித்தான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.



முன்னதாக, கோவை மத்திய சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து, சக்தி சாலை விரிவாக்கப்பணிக்காக மறுநடவு செய்யப்படவிருந்த மரங்கள் பார்வையிடப்பட்டன. அப்போது, இன்று வேப்ப மரம் ஒன்று மறு நடவு செய்யப்பட்டு குமரகுரு கல்லூரியில் நடப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் 32 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூன்று துணை வன பாதுகாவலர்கள் தலைமையில் பங்கேற்றனர்.

இதுகுறித்து துணை வன பாதுகாவலர் விஜய் நமது சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

ஓசை அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பு எங்களது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஒரு மரத்தினை மறுநடவு செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அதனை இவர்கள் மறுநடவு செய்வது மட்டுமின்றி அந்த மரம் மீண்டும் உயிர்பெற்று வளர்வதிலும் அக்கரைகொண்டு செயல்படுகின்றனர்.

தற்போது, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 38 பேரில் 31 பேர் மகாராஷ்டிரா, 5 பேர் குஜராத், 2 பேர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இப்பயிற்சி வகுப்பினை சிறப்பான முறையில் பயின்றுள்ளனர்" என்றார்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...