சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவியை தாக்கிய பேரூராட்சி முன்னாள் தலைவர் தலைமறைவு

சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம். தமிழக இடைக்கால முதலமைச்சராக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அணியினை சேர்ந்த இவர் சூலூர் பேரூராட்சி பணிகளுக்காக சேகரிக்கப்படும் மணல்களை முறைகேடாக எடுத்து விற்பனை செய்துவந்துள்ளார். இதனைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் சூலூர் ஒன்றியத்தின் மகளிர் அணித் தலைவி ராதாமணியின் தூண்டுதளின் பெயரிலேயே அனைத்துக் கட்சிகள் இப்பிரச்சனையில் தலையிடுவதாகக் கூறி சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநர் இணைந்து ராதாமணியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராதாமணி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக உள்ள சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

முன்னதாக, சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவி ராதாமணி கடந்த வாரம் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...