ஜிஎஸ்டி வரி குறித்து கோவையில் விழிப்புணர்வு பேரணி

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜிஎஸ்டி குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.



கோவை பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் வணிகவரித்துறை அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்தப் பேரணி வஉசி பூங்கா வரை சென்று நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துவோர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...