கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலைமறியல்

கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்குவதில் அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி இன்று பெற்றோர்கள், மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு உள்ளிட்டவற்றால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழக பாடத்திட்டத்தில் நீட் தேர்வு கேள்விகளானது மாறுபட்டு மருத்துவ படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கிவிட்டு மீதமுள்ளவர்களை நிர்வாகத்தினர் அலைக்கழித்துள்ளனர். 



இதனைத்தொடர்ந்து, இன்று மருத்துவக் கல்லூரியில் சிலருக்கு விண்ணப்பம் வழங்கிவிட்டு பிறரை நாளை வரும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்களும், மாணவர்களும் அவினாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர்.



முன்னதாக, இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறுகையில், ஏற்கனவே மத்திய அரசின் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்கள் பெரிதும் மனவுளைச்சல் அடைந்துள்ளனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விண்ணப்பங்கள் வழங்குவதில் முறையாக செயல்படுவதில்லை. இவ்வாறாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...