கோவையில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது



கோவை பழைய சுங்கம் குளத்து வாய்க்கால் வீதி கருணாநதி நகர் பகுதியில் வசிப்பவர் முன்னா (60). இவரது மனைவி ரமீஷா பேகம் (54). இவர்களுக்கு 3 மகன்கள் மட்டும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் முன்னா தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரமீஷா பேகம் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், முன்னா அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முன்னா-வை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, முன்னா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

கடந்த 4 வருடமாக எனது மனைவி என்னுடன் உடலுறவு கொள்ள மறுத்து வந்தார். மேலும், எனது உடலை பலகீனமாக்க அவர் எனக்குத் தெரியாமலேயே சில மருந்துகளை கொடுத்து வந்தார். எனவே, அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் என் மனைவி நேற்று இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு முன்னா கூறினார்.

தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...