கோவையில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது



கோவை பழைய சுங்கம் குளத்து வாய்க்கால் வீதி கருணாநதி நகர் பகுதியில் வசிப்பவர் முன்னா (60). இவரது மனைவி ரமீஷா பேகம் (54). இவர்களுக்கு 3 மகன்கள் மட்டும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் முன்னா தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரமீஷா பேகம் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், முன்னா அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முன்னா-வை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, முன்னா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

கடந்த 4 வருடமாக எனது மனைவி என்னுடன் உடலுறவு கொள்ள மறுத்து வந்தார். மேலும், எனது உடலை பலகீனமாக்க அவர் எனக்குத் தெரியாமலேயே சில மருந்துகளை கொடுத்து வந்தார். எனவே, அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் என் மனைவி நேற்று இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு முன்னா கூறினார்.

தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...