சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். கசிவை சரிசெய்ய ரூ.18 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சனிக்கிழமை (ஜூலை 4) நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் இருந்து கோவை மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக 49.5 அடி வரை தண்ணீர் எடுக்கப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 13.45 அடியாக உள்ளது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரை அணையில் இருந்து சுமார் 98 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்பட்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது 60 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அணையில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக கோடைக்காலத்தில் குடிநீர் விநியோகத்தின் அளவு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது கோடைக்காலத்தில் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 35 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், அணையில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை நடத்தினார்.



இந்த கசிவை சரிசெய்ய சுமார் ரூ.18 கோடி செலவாகும் என்றும், கேரள மாநில நீர்வளத்துறை மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பணிகள் நிறைவடைந்த பிறகு சிறுவாணி அணை மேலும் பலப்படுத்தப்பட்டு, கோடைக்காலத்தில் மாநகராட்சிப் பகுதிகளுக்கு மீண்டும் 60 எம்.எல்.டி. வரை குடிநீர் வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பணிகளை உடனடியாகத் தொடங்க தேவையான மனிதவளம் மற்றும் இயந்திரங்களை தயார்நிலையில் வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 49-இல் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் சாலை பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கேரள மாநில நீர்வளத்துறை அதிகாரிகள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...