என் வழி தனி வழி, என் அப்பா வழி தனி வழி - கோவையில் நடிகர் கவுதம் கார்த்திக் பேச்சு

கோவை சாந்தி திரையரங்கில் ‘இவன் தந்திரன்’ படக்குழுவின் நடிகர் கவுதம் கார்த்திக், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். பின்னர் ‘இவன் தந்திரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரய்லர் திரையிடப்பட்டது. ‘இவன் தந்திரன்’ படத்தின் படக்குழுவினர்களுடன் ரசிகர்களும் பாடல்கள் மற்றும் ட்ரய்லரை கண்டு ரசித்தனர்.



‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் இப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் என்ற கன்னட நடிகை ஹீரோயினாகவும், அர்ச்சனா ஸ்ரீ, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு வி.என்.மோகன், அபிரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.



முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கவுதம் கார்த்திக்; "நான் தமிழ் படத்தில் இயக்குநர் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். தமிழ் படத்தில் நான் நடிக்க எனது அப்பா முக்கிய காரணம். அப்பாவின் நடிப்பு வேற ட்ரெண்ட், நான் இன்னும் அவருக்கு சமமாக படங்களில் நடிக்கவில்லை. அவர் கூட நடிக்க நான் இன்னும் வளரனும்.

என்னோட ட்ராக்ல தான் நான் நடிகனும், அதுதான் அவரோட ஆசையும். தமிழ் படத்தில நான் இன்னும் பெரிய அளவில் சக்ஸஸ் பண்ணல, தமிழ் படத்தில் நடிக்கும் முன்பு மக்கள் மைண்ட்செட் எப்படி இருக்குனு புரிந்து நடிக்கனும், அது புரியாம தான் நான் நடித்த படம் பெரிய அளவில் ஓடவில்லை.

தற்போது ‘இவன் தந்திரன்’ படத்தில் தமிழ் மக்களுக்கு பிடித்த மாதிரி கதை கிடைத்துள்ளது. இந்த படம் முழுதும் சென்னையில் எடுக்கப்பட்டது. மழையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காமெடி, செண்டிமெண்ட், கமர்சியல் எல்லாம் இருக்கு. இந்த படத்திற்கு பிறகு எனது அடுத்த படம் இந்திரஜித் வெளிவர உள்ளது. ‘இவன் தந்திரன்’ படம் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படவுள்ளது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க சிறந்த படமாக இருக்கும்" என்றார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...