கோவையில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்!

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்று மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை கோவையில் உள்ள பேரூர் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், செங்குளம், சுண்டக்காமுத்தூர் வரலாற்று சிறப்பு மிக்க கிணறு, குனியமுத்தூர் வாய்க்கால், மலுமிச்சம்பட்டி குட்டை என அனைத்திலும் அதிகம் காணப்பட்ட குப்பை, சீமைகருவேல மரங்கள், புதர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும், குளங்களை தூர்வாரியும் வருகின்றனர். இதில் இதுவரை வாரந்தோறும் அதிக அளவிலாக 500க்கும் மேற்பட்ட தனார்வலர்கள் கலந்து கொண்டு இப்பணியை செய்து வருகின்றனர். மேலும், இப்பணிகளில் நமது கோவை நமது பசுமை, இ.எஸ்.ஐ அமைப்பு, தமிழ் பவுண்டேஷன் கனடா, கேமரூன் உற்பத்தி இந்தியா நிறுவனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து தூய்மை பணியை செய்து வருகின்றனர். 



இதனை தொடர்ந்து, இருபதாவது வார களப்பணியாக பேரூர் தமிழ் கல்லூரி அருகில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை எனும் அணையை மீட்டெடுக்கும் முயற்சியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு களம் காண உள்ளனர். கோயமுத்தூர் திருப்பணையின் மூலமாக உக்கடம் குளத்திற்கு நீர் வரும் அணைகளில் முக்கிய அணையாகும். இவ்வணை சுமார் 530 அடி கொண்டது தற்போது 200 அடி வரை அணை முழுவதும் புதர் மண்டி நிரம்பி உள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டு அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்! 



இடம்:பேரூர் தமிழ் கல்லூரி அருகில், நொய்யல் ஆற்று பாலம்.

நாள்:25/06/2017

நேரம்:காலை 7.00 முதல் 9.00வரை

ஒருங்கிணைப்பு:கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

தொடர்புக்கு:8015714790, 94432 37422, 9789143103, email:[email protected]

குறிப்பு: 

முழுவதும் புதர்மண்டி இருப்பதால் தன்னார்வலர்கள் தாங்கள் வரும்பொழுது கொத்து,மண்வெட்டி, அருவாள் கொண்டு வரவும்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...