குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்: அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி பேட்டி


கோவை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தற்போது பருவமழைக் காலம் துவங்கப்படவுள்ளது. இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், நீர்ச்சத்து நிறைந்த ஆகாராம் அதிகளவில் கொடுக்க வேண்டும், குழந்தைகள் அதிகப்படியாக விளையாடி சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கோவை அரசு பொது மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு பொது மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் நமது சிம்ப்ளி சிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

கோவை அரசு பொது மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக கோவை, உதகை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலகட்டம் டெங்கு நோய் பரவுக் கூடிய காலகட்டம் அல்ல. கேரளாவில் தற்போது இந்த வகையான காய்ச்சல் பரவிவருகிறது. அங்கு சென்று வந்த ஒருவரிடம் இருந்துதான் இந்த காய்ச்சல் கோவை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பரவிவருகிறது.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் முறை நம்மிடமே உள்ளது. பொது இடங்களில், வீட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும். தேங்காய் தொட்டி, பொது குடிநீர் விநியோகத் தொட்டி, பயன்பாடு அற்ற பழைய டயர்கள் உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

வீட்டில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் தேங்கும் ஒரு பகுதி இருக்கும். அதனை வாரம் ஒரு முறை என சுத்தம் செய்ய வேண்டும். அதனை பெரும்பாலான மக்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், அந்தப் பகுதியில் கொசு லார்வா (டெங்கு கொசுப்புழுக்கள்) உருவாகின்றன. 

இந்த டெங்கு மூன்று வகைப்படும். ஒன்று சாதாரண காய்ச்சல். இதில் பாதிக்கப்படும் 90 சதவிகித மக்களை எளிதில் குணப்படுத்தி விடலாம். மீதமுள்ள இரு வகை காய்ச்சல் மிகவும் சிரமம் அளிக்கக் கூடியது. உடல்நிலையில் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். கோவை அரசு பொது மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைக்கு அனைத்து வசதிகளும் உள்ளன.

பருவ மழை துவங்கவுள்ள காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகளவில் கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகப்படியாக விளையாடி சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்".

இவ்வாறு கோவை அரசு பொது மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...