பரபரப்பான சூழலை ஏற்படுத்திய "நீட் தேர்வு" முடிவுகள் இன்று வெளியீடு

மருத்துவத்திற்கான நீட் தேர்வினை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், மருத்துவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, இதனால் ஏழை, எழிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் அவசரம் சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே மொத்தம் 65,000 எம்பிபிஎஸ் இடங்களுக்காகவும், 23,000 பிடிஎஸ் இடங்களுக்காகவும் தேர்வில் கடந்த மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 88 அயிரம் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். 

இத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 8ம் தேதியன்று வெளியிடப்படவிருந்த நிலையில், பிறமொழிகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களில் பாரபட்சம் இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூன் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தார்.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கினர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை சிபிஎஸ்இ வாரியமே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் வரும் 26-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இன்று நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 

"cbseneet.nic.in" என்ற இணையதளத்தில் மாணவர்கள் நீட் தேர்விற்கான முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...