சிறுமுகை வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை உடல்நலக்குறைவால் பலி

கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் காணப்படுகின்றன.  இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சுற்றுவட்டார குடியிருப்பு, விவசாய பகுதிகளில் நுழைவது வழக்கம். 

இந்த நிலையில், சிறுமுகை வனச்சரக வனத்துறையினர் கூத்தம் மண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அணையின் நீர்த்தேக்க பகுதி அருகே ஒரு காட்டு யானை கீழே விழுந்து எழும்ப முடியாமல் போராடிக் கொண்டிருந்துள்ளது. இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர், கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கீழே விழுந்த யானை 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை என தெரிய வந்தது. வயதானதால் தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் யானை தவறி கீழே விழுந்திருப்பதும் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அழித்து வந்தனனர். இதில், நேற்று சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் வனத்துறையில் தொடர்ந்து அந்த யானையினை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அந்த யானை உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தது. தொடர்ந்து, யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அதேப் பகுதியில் அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...