தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்- மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி


தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டியளித்தார்.

கோவை மற்றும் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரும் என முதல்வர் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. கணினி வழி ஜிஎஸ்டி தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள், சந்தேகங்கள் குறித்து கோவை, திருப்பூர் சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் நேரடியாக விளக்கப்படவுள்ளது. அறிவித்தப்படி ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டாலும் அடுத்த 3 மாதங்களுக்கு வரி விதிப்பில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படும்.

குடியரசுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அவரை வேண்டாம் என்று கூறுவதற்கு எந்த காரணங்களும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை. ராம்நாத் கோவிந்த் செய்தி தொடர்பாளராக இருந்தபோது கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை "ஏலியன்ஸ்" என்று கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுவது முற்றிலும் பொய்" இவ்வாறு மத்திய அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...