ஓ.பி.எஸ் அணி எம்எல்ஏ-க்கள் அணி மாறப்போவதாக சசிகலா அணியினரால் தவறான தகவல் பரப்பபடுகிறது- முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஓ.பி.எஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அணி மாறப்போவதாக சசிகலா அணியினரால் தவறான தகவல் பரப்பபடுகி்றது என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக கூட்டணியில் இருந்த 4 எம்.எல்.ஏ-க்கள் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்தது என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசிடம் இருந்து அவர்கள் விலகி நிற்க விரும்புகின்றனர் என்பதை காட்டுகிறது. அரசை நடத்துபவர்கள் இதை கவனமாக பார்க்க வேண்டும். உண்மையான அதிமுகவாக தாங்கள் தான் செயல்பட்டு வருகிறோம். தங்கதமிழ்செல்வன் வெளிநடப்பு செய்து இருக்கக் கூடாது. 

ஜி.எஸ்.டி குறித்த சரியான புரிதல் இல்லாமல் திமுக எம்.எல்.ஏக்கள் பேசிவருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பிய மாற்றங்களுடன் கூடிய ஜி.எஸ்.டி தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. 

ஜி.எஸ்.டி காரணமாக தமிழக அரசு பட்ஜெட்டில் 4000 கோடி வணிக வரி அதிகரிக்கும். நல்ல முறையில் பயிற்சிகளை வழங்க வேண்டும். அதிமுக புரட்சி தலைவி அணியில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் யாரும் அணி மாற வாய்ப்பில்லை. ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணிக்கு தொண்டர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. 

பாஜக அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது குறித்து விரைவில் உயர்மட்ட குழு கூடி நல்ல முடிவை அறிவிப்போம். ஏற்கனவே மோடி - ஓ.பி.எஸ் சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளருக்கு பிரதமர் மோடி ஆதரவு கேட்டு இருந்தார். இரண்டு நாட்களில் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது குறித்து முடிவு செய்வோம்.

ஓ.பி.எஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அணி மாறப்போவதாக சசிகலா தரப்பினரால் தவறான தகவல் பரப்பப்படுகின்றது. விரைவில் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள். இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போது நடத்த வாய்ப்பில்லை" இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...