மண் சட்டிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி வண்டல் மண் சட்டிகளுடன் வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அதில் "கோவை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மற்றும் கிராவல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற நீர் நிலைகளிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தால் விவசாயிகள் பயனடைவார்கள். நீர் நிலைகளும் தூர்வாரப்படும்' என்றார். 

முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாய சங்கத்தினர் கையில் வண்டல் மண் சட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...