அங்கீகரிக்கப்படாத மனைகளை வரும் 03.11.2017-க்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் பொருட்டு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணை எண்.78, நாள். 04.05.2017– ல் தெரிவித்துள்ளபடி 20.10.2016 -க்கு முன்னர் பத்திரபதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் (அ) மனைகிரையம் பெற்றவர்கள் தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளவேண்டுமென கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனையிடங்களை உரிய ஆவணங்களுடன் www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் வழியாக உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தல் அவசியமானதாகும். ஆகவே, அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனையிடங்கள் 03.11.2017 தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேற்படி பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகள் மற்றும் மனையிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறை/உள்ளுர் திட்டகுழுமத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தனிப்பட்ட மனைகளை வரன்முறை செய்ய விண்ணப்பித்து மனைகளை வரன்முறை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனைகளை வரைமுறைப்படுத்தும் மேற்படி திட்டதின் கீழ் வரைமுறைப்படுத்திய மனைகளுக்கு மட்டுமே எதிர்காலங்களில் கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகளை மாநகராட்சி மூலம் பெற்றுக் கொள்ள இயலும். மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாநகராட்சியில் 5 மண்டல அலுவலகங்களையும், பிரதான அலுவலகத்தையும் மற்றும் கோயம்புத்தூர் உள்ளுர் திட்டக் குழும அலுவலகத்தையும் அணுகி விபரம் பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...