கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பரபரப்பு


மார்கசிஸ்ட் கட்சியின் டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தில் ஜீன் ஏழாம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் ஒருபகுதியாக கோவை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் அதிகம் இருக்கக்கூடிய பகுதியான துடியலூரில் நேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது இந்து முன்னனி மற்றும் இந்துத்துவா அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர். இதனையடுத்து, இன்று காலை 6 மணியளவில் மர்ம நபர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பாசிடர் காரின் மீது பெட்ரோல் கலந்த இரண்டு மண்ணெண்ணெய் குண்டுகளை வீசியுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, கட்சியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் லஷ்மி, மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களிடம் விசாராணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணய் கலந்த குண்டுகள் வீசியதில் உடைந்துபோன பாட்டில்களில் இருந்து கைரேகையை சேகரித்தனர். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு குற்றாவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...