கூலிக்கு ஜவுளி பொருள் உற்பத்தி செய்வோரின் சேவை வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைப்பு - சைமா பாராட்டு

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலை வாய்ப்பை கொடுத்து வரும் ஜவுளித் தொழிலில் பெரும்பாலான உற்பத்தி கூலிக்கு சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் குறிப்பாக கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, சாயப்பட்டறை போன்ற துறைகளினால் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள கலால் வரி திட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலிக்கு சேவை வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் குறைந்தபட்ச வரியான 5 சதவீத வரியை விதிப்பதன் மூலம் மேற்கண்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் இடுபொருட்கள் மீதான வரியை கழித்து மீதி வரியை செலுத்த இயலும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது.

இக்கோரிக்கையை ஏற்று சரக்கு மற்றும் சேவை வரிக்குழு 16-வது கூட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலியின் மீதான சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறித்து அறிவித்துள்ளது.

சைமா தலைவர் எம்.செந்தில்குமார் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தமது வேண்டுகோளை ஏற்று ஜவுளி உற்பத்தி கூலி சேவை வரியை 5 சதவிகிதமான குறைத்தமைக்கு ஒட்டுமொத்த ஜவுளித்துறையின் சார்பாக தனது நன்றிகளை நிதியமைச்சருக்கும், ஜவுளித்துறை அமைச்சருக்கும், தென் மாநில முதலமைச்சருகும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் சைமா அனைத்து ஜவுளி உற்பத்தி கூலிக்கும் 5 சதவிகித வரியை விதிக்க கோரியிருந்தது. ஆயத்த ஆடை மற்றும் விரிப்பு துணிகள் இவற்றில் விடுபட்டு இருப்பது ஜவுளி உற்பத்தியிலேயே அதிக வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் இத்துறைகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்குழு கூட்டத்தில் ஆயத்த ஆடை, விரிப்பு மற்றும் இதர மதிப்பு கூட்டுப் பொருட்களை கூலிக்கு தயார் செய்யும் அனைத்து துறைகளையும் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று சைமா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சைமா தலைவர் மேலும் கூறுகையில், செயற்கை பஞ்சு மற்றும் நூல் மீதான வரியை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டியதன் அவசியத்தை நினைவுகூர்ந்து வரும் 18 ஆம் தேதி உரிய அறிவிப்பை விடுக்க நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

பாலியஸ்டர் மற்றும் இதர பஞ்சு மற்றும் நூலின் மூலம் தயாரிக்கப்படும் துணை பெரும்பாலும் பாமர மக்களால் பயன்படுத்தப்படுவதாலும், பல்வேறு அரசுகளின் இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை திட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாலும், அரசு இத்துணிகளின் விலையை வரிவிதிப்பினால் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, ஏற்கனவே விடுத்துள்ள இந்த வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலனை செய்து செயற்கை இழை மற்றும் நூலின் மீதான வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கும் என்று சைமா தலைவர் எம்.செந்தில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...