கூலிக்கு ஜவுளி பொருள் உற்பத்தி செய்வோரின் சேவை வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைப்பு - சைமா பாராட்டு

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலை வாய்ப்பை கொடுத்து வரும் ஜவுளித் தொழிலில் பெரும்பாலான உற்பத்தி கூலிக்கு சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் குறிப்பாக கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, சாயப்பட்டறை போன்ற துறைகளினால் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள கலால் வரி திட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலிக்கு சேவை வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் குறைந்தபட்ச வரியான 5 சதவீத வரியை விதிப்பதன் மூலம் மேற்கண்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் இடுபொருட்கள் மீதான வரியை கழித்து மீதி வரியை செலுத்த இயலும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது.

இக்கோரிக்கையை ஏற்று சரக்கு மற்றும் சேவை வரிக்குழு 16-வது கூட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலியின் மீதான சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறித்து அறிவித்துள்ளது.

சைமா தலைவர் எம்.செந்தில்குமார் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தமது வேண்டுகோளை ஏற்று ஜவுளி உற்பத்தி கூலி சேவை வரியை 5 சதவிகிதமான குறைத்தமைக்கு ஒட்டுமொத்த ஜவுளித்துறையின் சார்பாக தனது நன்றிகளை நிதியமைச்சருக்கும், ஜவுளித்துறை அமைச்சருக்கும், தென் மாநில முதலமைச்சருகும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் சைமா அனைத்து ஜவுளி உற்பத்தி கூலிக்கும் 5 சதவிகித வரியை விதிக்க கோரியிருந்தது. ஆயத்த ஆடை மற்றும் விரிப்பு துணிகள் இவற்றில் விடுபட்டு இருப்பது ஜவுளி உற்பத்தியிலேயே அதிக வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் இத்துறைகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்குழு கூட்டத்தில் ஆயத்த ஆடை, விரிப்பு மற்றும் இதர மதிப்பு கூட்டுப் பொருட்களை கூலிக்கு தயார் செய்யும் அனைத்து துறைகளையும் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று சைமா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சைமா தலைவர் மேலும் கூறுகையில், செயற்கை பஞ்சு மற்றும் நூல் மீதான வரியை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டியதன் அவசியத்தை நினைவுகூர்ந்து வரும் 18 ஆம் தேதி உரிய அறிவிப்பை விடுக்க நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

பாலியஸ்டர் மற்றும் இதர பஞ்சு மற்றும் நூலின் மூலம் தயாரிக்கப்படும் துணை பெரும்பாலும் பாமர மக்களால் பயன்படுத்தப்படுவதாலும், பல்வேறு அரசுகளின் இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை திட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாலும், அரசு இத்துணிகளின் விலையை வரிவிதிப்பினால் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, ஏற்கனவே விடுத்துள்ள இந்த வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலனை செய்து செயற்கை இழை மற்றும் நூலின் மீதான வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கும் என்று சைமா தலைவர் எம்.செந்தில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...