3 ஆண்டுகளுக்கான நலத்திட்டங்களின் வரை அறிக்கைகளுடன் தமிழக அரசு மத்திய அரசை அணுகினால் உடனடியாக நிதி ஒதுக்கி தரப்படும் - அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேட்டி

3 ஆண்டுகளுக்கு தேவையான நலத்திட்டங்களுக்கான வரை அறிக்கைகளுடன் தமிழக அரசு மத்திய அரசை அணுகினால் உடனடியாக நிதி ஒதுக்கி தரப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெற்ற அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தலைப்பிலான மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தொழில்துறையினரிடையே உரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது:-

முந்தைய ஆட்சி காலத்தில் 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல்கள் புரையோடிப்போயிருந்ததாக குற்றம்சாட்டிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசின் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். மத்தியில் திறைமையான தலைவர், நிலையான ஆட்சி நடைபெறுவதாக கூறிய அவர் மத்திய அரசின் பல்துறை சாதனைகளையும் பட்டியலிட்டார். 



மத்தியபிரதேசத்தில் உற்பத்தி அதிகரித்துள்ள போதும் தேவை குறைந்துள்ளதே விவசாயிகளின் பிரச்சனை எனவும் குறிப்பிட்டார். வளர்ச்சி என்பதுதான் பிரதமர் மோடியின் முக்கிய இலக்கு எனக்கூறிய அவர் புதிய இந்தியாவை அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். 

அடுத்த 2 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள 50 நகரங்கள் கூடுதலாக விமான சேவை மூலம் இணைக்கப்படும் என தெரிவித்த அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கூடுதலாக பலர் வருமான வரி செலுத்த முன்வந்துள்ளதால் தற்போது வருமான வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...