பொறியியல் மாணவர்களை ஊக்குவிக்கும் சிம்ப்ளிசிட்டி மற்றும் எஜுதர்மா


12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 180-க்கும் மேற்பட்ட கட்-ஆப் பெற்று பொறியியல் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது சிம்ப்ளிசிட்டி மற்றும் எஜுதர்மா இணைந்து செயலாற்றி வருகின்றன. 

இதில், 180-க்கும் மேற்பட்ட கட்-ஆப் பெற்றுள்ள மாணவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி கல்லூரி தேர்வின் போது தரவரிசையில் 7.0 பெற்றவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் சேர ஊக்கப்படுத்துவது உள்ளிட்டவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிம்ப்ளிசிட்டி செயலி, தற்போதைய நிலவரம், உள்ளூர் செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, அரசு அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, ரேடியோ உள்ளிட்டவற்றை மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிந்து பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது.

எஜுதர்மா (www.edudharma.org) என்பது ஒரு இணையதளப்பக்கமாக செயல்பட்டு வருவதாகும். எஜுதர்மா, தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வியினை தொடர, விளையாட்டு மற்றும் பிற புதுமையான திட்டங்களைத் தொடர ஒரு அடித்தளமாக இருந்து செயல்பட்டு வருகிறது. இவை ஒரு குழுவாக செயல்பட்டு மாணவர்களுக்கான நிதியைத் திரட்டி அதன் மூலம் அவர்களுக்கு உதவிவருகிறது.

இதுகுறித்து மேலும் தகவலறிய, மற்றும் இதன் மூலம் பயனடைய 0422-4500445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது [email protected] என்னும் இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...