கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


கோவை: திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என்றும், கட்சி நிர்வாகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்தார். மேலும், திமுகவில் சாமானிய தொண்டர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இது தொடர்பாக தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் திமுகவைச் சேர்ந்த பல கவுன்சிலர்களும், கட்சி நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்து விலக உள்ளதாகவும் பாபு தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...