கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டினார். தினசரி சுகாதார பராமரிப்பு உறுதி செய்யப்பட்டது.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் சுகாதார மேம்பாடு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து வழிகாட்டினார்.



ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் DBC பணியாளர் மற்றும் RR டீம் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. பின்னர் bleaching பவுடர் போடப்பட்டு, தண்ணீர் தொட்டிக்கு abate மருந்து ஊற்றப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வார்டு ஆய்வாளர் பாஸ்கர் உடன் இருந்தார்.



பெருமாள் கோயில் வீதி பகுதியில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்தை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். குழந்தைகள் வருகை பதிவேடு மற்றும் சமையலறை ஆய்வு செய்யப்பட்டன. இதில் அங்கன்வாடி ஊழியர்களும் உடன் இருந்தனர். குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பராமரிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.



ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் ஆசை பேக்கரி முதல் மகாலட்சுமி கோயில் வரை சாலையோரத்தில் உள்ள மரக்குப்பைகள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு, மரக்குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.



துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் மற்றும் சாக்கடை மண்கள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இதை நேரில் ஆய்வு செய்து, சாலையோரத்தில் உள்ள குப்பைகளை தினசரி சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். குடியிருப்பு பகுதிகளில் தினசரி சுகாதார பராமரிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.



பிளாக் மாரியம்மன் கோயில் வீதி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கான ஆய்வு பணி நடைபெற்றது. வார்டு AE குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உடன் இருந்தார். மழைக்கால வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.


Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...