கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கணுவாயில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி வைத்து  அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.


கோவை: புதிய வாகன விலை உயர்வு, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கணுவாய் பகுதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஜூன் 22 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகன விதிமுறைகள், வரி உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் எர்த் மூவர்ஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்தத் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வாடகை கட்டணத்தை உயர்த்திடவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதும் மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் தொடர்புடைய வாகனங்கள் இயக்கப்படாமல் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கனிமவளக் கொள்ளையை தடுக்க, அரசு கனிம வளங்களை எடுக்க உரிய லைசென்ஸ் முறையில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், சங்கத்தின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக கட்டுமானத் துறை மற்றும் மண் அள்ளுதல் தொடர்பான பணிகளில் தற்காலிக பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...