கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கணுவாயில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி வைத்து  அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.


கோவை: புதிய வாகன விலை உயர்வு, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கணுவாய் பகுதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஜூன் 22 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகன விதிமுறைகள், வரி உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் எர்த் மூவர்ஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்தத் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வாடகை கட்டணத்தை உயர்த்திடவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதும் மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் தொடர்புடைய வாகனங்கள் இயக்கப்படாமல் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கனிமவளக் கொள்ளையை தடுக்க, அரசு கனிம வளங்களை எடுக்க உரிய லைசென்ஸ் முறையில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், சங்கத்தின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக கட்டுமானத் துறை மற்றும் மண் அள்ளுதல் தொடர்பான பணிகளில் தற்காலிக பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...