கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கணுவாயில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி வைத்து  அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.


கோவை: புதிய வாகன விலை உயர்வு, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கணுவாய் பகுதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஜூன் 22 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகன விதிமுறைகள், வரி உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் எர்த் மூவர்ஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்தத் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வாடகை கட்டணத்தை உயர்த்திடவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதும் மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் தொடர்புடைய வாகனங்கள் இயக்கப்படாமல் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கனிமவளக் கொள்ளையை தடுக்க, அரசு கனிம வளங்களை எடுக்க உரிய லைசென்ஸ் முறையில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், சங்கத்தின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக கட்டுமானத் துறை மற்றும் மண் அள்ளுதல் தொடர்பான பணிகளில் தற்காலிக பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...