கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் ஜூன் 13 முதல் 5 நாள்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்படும். GD மேம்பாலம் கட்டுமான பணிகள் காரணமாக தற்காலிகமாக அகற்றப்பட்டிருந்த சிக்னல்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை-அவிநாசி சாலையில் இரண்டு முக்கிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் இன்று (ஜூன் 13) முதல் ஐந்து நாள்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படவுள்ளன. மாநகர காவல் துறை இது தொடர்பாக செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.






கோயமுத்தூர் மாநகரின் மிக முக்கியமான போக்குவரத்து வழித்தடமான அவிநாசி சாலையில் GD மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததன் காரணமாக, ESSO Bank சந்திப்பு மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டிருந்தன. தற்போது GD மேம்பாலம் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.






இதைத் தொடர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள ESSO Bank சந்திப்பு மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிக்னல்கள் சனிக்கிழமை முதல் ஜூன் 17 வரை ஐந்து நாள்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படவுள்ளன.




சோதனை இயக்கத்தின் போது, போக்குவரத்து சிக்னல் செயல்பாடுகளின் தன்மை மற்றும் வாகனப் போக்குவரத்தின் அடர்த்தி ஆகியவை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்படவுள்ளது. ஆய்வின் முடிவில், சிக்னல்களின் நேரக் கணக்கீடு அல்லது அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு, அதன்பின் நிரந்தரமாக போக்குவரத்து சிக்னல்கள் இயங்க நடவடிக்கை எடுக்கপடும்.




U-turn தற்காலிக மூடல்:




புதிய சிக்னல்களின் சோதனை ஓட்டம் காரணமாக, Pioneer Mill சந்திப்பு அருகில் உள்ள U-turn தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த புதிய போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கை மூலமாக பீளமேடு, காந்தி நகர், பாரதி காலனி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் பயன்பெறுவார்கள் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.




சோதனை காலத்தின் போது வாகன ஓட்டிகள் புதிய சிக்னல்களை கவனமாக கடைப்பிடிக்குமாறும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுமாறும் மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...