கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், எரியாத விளக்குகளை கண்டறிந்து உடனடி சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


Coimbatore:

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் அமைந்துள்ள தெருவிளக்குகளின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் தற்போது சுமார் 1,03,755 தெருவிளக்குகள் உள்ள நிலையில், அவை முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.



மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், மாநகர தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வரி வசூல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் நேற்று இரவு 100 சதவீத ஆய்வை மேற்கொண்டனர்.



ஆய்வின் போது எரியாத தெருவிளக்குகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை உடனடியாக சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக, மரக்கடை சாலை, மில் ரோடு, பூமார்க்கெட், சுக்கிரவார்பேட்டை மற்றும் காந்திபார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளின் நிலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...