செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டத்துக்கு முதலிடமும் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் பெற்றனர். குன்னூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆறு அணிகளில் வெற்றி பெற்றனர்.


Coimbatore: தேசிய அளவிலான Hackathon போட்டியில் கோயம்புத்தூர் ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதலிடத்தை வென்றதுடன், திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியையும் பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி குப்பைகளை தரம் பிரிக்கும் புதுமையான திட்டத்தை உருவாக்கிய மாணவிகளுக்கு இந்த சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது.

முன்னதாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் தேசிய அளவில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் ஆறு அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். அந்த ஆறு அணிகளுள் கோயம்புத்தூர் ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்தன.

அண்மையில் குன்னூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் Coimbatore ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகளின் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டமானது தேசிய அளவில் முதலிடத்தையும், திட்ட செயலாக்கத்திற்கான ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியையும் பெற்றது. இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற மாணவிகளை SNR Sons அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr. Sundar Ramakrishnan மற்றும் கல்லூரி முதல்வர் Dr. K. Chithra ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர். கல்வியில் புதுமையான சிந்தனை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...