கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோசடி நடைபெறுவதாக எச்சரித்துள்ள கோவை மாவட்ட காவல்துறை, சந்தேக அழைப்புகள் குறித்து 1930-ல் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore:

கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி நடைபெற்று வரும் போலி அழைப்புகள் மற்றும் இணைய மோசடிகள் குறித்து கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் அரசு அதிகாரிகள் அல்லது பள்ளி நிர்வாகத்தினர் எனத் தங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கச் செய்வதாகக் கூறி தொடர்பு கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி (OTP) எண்கள் மற்றும் முன்பணம் உள்ளிட்ட தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

அரசு அல்லது கல்வி நிறுவனங்கள் உதவித்தொகை பெறுவதற்காக பணம் கோருவதில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், வங்கி விவரங்கள் மற்றும் ஓடிபி எண்களை யாருடனும் பகிரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உதவித்தொகை தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது இணைய மோசடி முயற்சிகள் குறித்து உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...