கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி முற்போக்கு அமைப்புகள் காவல் ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தன.

கோவை: கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, அரசுக்குச் சொந்தமான பள்ளி மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற பயிற்சிகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி சி.பி.ஐ. (எம்.எல்.) உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தன.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. (எம்.எல்.) மாநிலக் குழு உறுப்பினர் பெரோஸ், கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சிகள் நடத்தப்படுவதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றதாகக் கூறினார்.

அதன் விளைவாக, பொது இடங்களில் இதுபோன்ற பயிற்சிகளை நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்திருந்ததாகவும், தற்போது மீண்டும் அரசுப் பள்ளி மைதானங்களில் 'சாகா' பயிற்சிகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.



மேலும், இதுபோன்ற பயிற்சிகள் மாணவர்களிடையே மத மற்றும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பள்ளி வளாகங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பொது இடங்கள் இதற்காக பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசு உடனடியாக தலையிட்டு, அரசுப் பள்ளி மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சிகள் நடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பெரோஸ் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...