கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு, வெள்ளிச் சங்கிலி மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.47 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் வெள்ளிச் சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் சம்பந்தப்பட்ட நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கதிர் (20) என்ற கல்லூரி மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி-டெக் ஐடி படித்து வருகிறார். கடந்த ஜூன் 5-ம் தேதி தனது நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த அவரை ரிஸ்வான், சாஹிர், ஜெகநாத் மற்றும் அபுஸ் ஆகிய நான்கு பேர் திடீரென சூழ்ந்து மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மண்டியிடுமாறு மிரட்டியுள்ளனர்.

மேலும் அவர்களில் ஒருவர் கத்தி வைத்திருப்பதாகக் கூறி கடுமையாக மாணவரை அச்சுறுத்தியுள்ளனர். பயந்து போன மாணவர் அவர்கள் கூறியபடி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.47,000 ஐ அவர்கள் குறிப்பிட்ட கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

பணம் மட்டுமல்லாமல், குற்றவாளிகள் அவரிடம் இருந்த ஒரு வெள்ளிச் சங்கிலி மற்றும் Vivo T2 Pro செல்போனையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

மாணவர் கதிர் அளித்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் கொள்ளை, மிரட்டல் மற்றும் சொத்து அபகரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் மேற்கொண்ட தீவிர வேட்டையில் குற்றச்சாட்டுக்குள்ளான நான்கு பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள ஒரு குற்றவாளியை கைது செய்ய போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...