கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு, வெள்ளிச் சங்கிலி மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.47 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் வெள்ளிச் சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் சம்பந்தப்பட்ட நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கதிர் (20) என்ற கல்லூரி மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி-டெக் ஐடி படித்து வருகிறார். கடந்த ஜூன் 5-ம் தேதி தனது நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த அவரை ரிஸ்வான், சாஹிர், ஜெகநாத் மற்றும் அபுஸ் ஆகிய நான்கு பேர் திடீரென சூழ்ந்து மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மண்டியிடுமாறு மிரட்டியுள்ளனர்.

மேலும் அவர்களில் ஒருவர் கத்தி வைத்திருப்பதாகக் கூறி கடுமையாக மாணவரை அச்சுறுத்தியுள்ளனர். பயந்து போன மாணவர் அவர்கள் கூறியபடி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.47,000 ஐ அவர்கள் குறிப்பிட்ட கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

பணம் மட்டுமல்லாமல், குற்றவாளிகள் அவரிடம் இருந்த ஒரு வெள்ளிச் சங்கிலி மற்றும் Vivo T2 Pro செல்போனையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

மாணவர் கதிர் அளித்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் கொள்ளை, மிரட்டல் மற்றும் சொத்து அபகரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் மேற்கொண்ட தீவிர வேட்டையில் குற்றச்சாட்டுக்குள்ளான நான்கு பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள ஒரு குற்றவாளியை கைது செய்ய போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...