கோடை விடுமுறை முடிவு: திருப்பூர் பள்ளிகள் திறப்பு - மாணவிகளுக்கு இனிப்பு, ரோஜா பூக்களுடன் வரவேற்பு

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிவில் மாணவிகளுக்கு போலீசார் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள், ரோஜா பூக்கள் வழங்கி பேண்டு வாத்தியத்துடன் சிறப்பு வரவேற்பு அளித்தனர். மாணவிகள் மொபைல் எடுத்து வராமல் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்தனர்.


Tiruppur: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்து வகை பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்வியாண்டின் முதல் நாளில் மாணவிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.






பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மாணவிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் ஆசிரியர்கள் ஒழுங்குப்படுத்தி பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். முதல் நாள் குழந்தைகளை பள்ளிக்கு விட வந்த பெற்றோர்கள் பள்ளியிலிருந்து வெளியே செல்ல மனமின்றி பள்ளி வளாகத்தின் கேட் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.






பள்ளிக்கு வரும் மாணவிகள் மொபைல் போன்களை எடுத்து வரக்கூடாது என போலீசார் அறிவுரை செய்து பள்ளிக்குள் மாணவிகளை அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதால் எந்தவித பிரச்சனையும் இன்றி பள்ளி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் வருகை தந்த 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பு வரவேற்பு அளித்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவிகளை பள்ளிக்குள் ஊர்வலமாக அழைத்து சென்று அவரவர் வகுப்பறைகளில் அமர வைத்தனர்.




புதிய கல்வியாண்டை உற்சாகத்துடன் தொடங்கிய மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர். ஆசிரியர்களும் மாணவிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து புதிய கல்வியாண்டை தொடங்கினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...