கோவையில் மூன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு அலுவலகங்களில் ஆவணங்கள், கணக்குப் பதிவுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகாரா? அல்லது ஆவணங்கள் சரிபார்ப்பு சோதனையா? என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த திடீர் சோதனையால் பத்திர பதிவு அலுவலங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சுப முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதனால் , சுபமூர்த்த நாளான இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகிறதா, விதிமுறைகளை மீறி பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. லஞ்சப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




கோவை மாவட்டத்தை பொறுத்தவரைதொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு பகுதிகளில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.




தொண்டாமுத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் DSP, Inspector உள்ளிட்ட ஆறு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, அலுவலக ஆவணங்கள், கணக்குப் பதிவேடுகள் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான விவரங்கள் விரிவாக சரிபார்க்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






அதேபோல, சரவணம்பட்டி காவல் நிலையச் சாலையில் அமைந்துள்ள காந்திபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் மற்றும் ரெட்பீல்டு பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரிவான சோதனையில் ஈடுபட்டனர்.




மூன்று அலுவலகங்களிலும் பல மணி நேரங்களாக சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோவையில் முக்கியபத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த திடீர் சோதனையால்

பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சோதனை குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...