கோவையில் மூன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு அலுவலகங்களில் ஆவணங்கள், கணக்குப் பதிவுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகாரா? அல்லது ஆவணங்கள் சரிபார்ப்பு சோதனையா? என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த திடீர் சோதனையால் பத்திர பதிவு அலுவலங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சுப முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதனால் , சுபமூர்த்த நாளான இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகிறதா, விதிமுறைகளை மீறி பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. லஞ்சப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




கோவை மாவட்டத்தை பொறுத்தவரைதொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு பகுதிகளில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.




தொண்டாமுத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் DSP, Inspector உள்ளிட்ட ஆறு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, அலுவலக ஆவணங்கள், கணக்குப் பதிவேடுகள் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான விவரங்கள் விரிவாக சரிபார்க்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






அதேபோல, சரவணம்பட்டி காவல் நிலையச் சாலையில் அமைந்துள்ள காந்திபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் மற்றும் ரெட்பீல்டு பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரிவான சோதனையில் ஈடுபட்டனர்.




மூன்று அலுவலகங்களிலும் பல மணி நேரங்களாக சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோவையில் முக்கியபத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த திடீர் சோதனையால்

பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சோதனை குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...