கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு கட்டடம் மாநகராட்சியால் இடிக்கப்பட்டு வருகிறது.


கோவை: ஆவாரம்பாளையத்தில் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்த OSR நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மூன்று மாடி வணிகக் கட்டடத்தை, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி இடித்து அகற்றி வருகிறது.

கோவை மாநகராட்சியின் 48வது வார்டுக்குட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில், கடந்த 1971ஆம் ஆண்டு பாலாஜி நகர் என்ற பெயரில் 8 ஏக்கர் பரப்பளவில் லே-அவுட் உருவாக்கப்பட்டது. அப்போது, பொதுப் பயன்பாட்டிற்காக 64 சென்ட் பரப்பளவில் திறந்தவெளி ஒதுக்கீட்டு (OSR) நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தாமோதரன் என்பவர் அந்த ஒதுக்கீட்டு நிலத்தில் 7 சென்ட் பரப்பளவை ஆக்கிரமித்து வணிகக் கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அது சுமார் 11,000 சதுர அடி பரப்பளவில், மூன்று மாடிகளுடன் கூடிய வணிக வளாகமாக விரிவடைந்தது. அதில், 10 க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டதுடன், ஒரு பகுதியில் லாட்ஜும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.



இதுகுறித்து தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கம் மற்றும் பாலாஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சியும் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டடம் அகற்றப்படாததால், கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கட்டட உரிமையாளரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நகரமைப்பு அலுவலர் தாமோதரன் மற்றும் உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த் பிரபாகர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள OSR நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீட்கப்படும் நிலங்கள் பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...