போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்- சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு


ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்குதல், 13-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே-15 ஆம் தேதி முதல் (நாளை) போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சருடன் சிஐடியி, ஏஐடியுசி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் (மே 15) திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று முதலே அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சிறப்பு ரயில்சேவை துவக்கம்:-

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் நாளை கோவை மற்றும் சென்னையில் சிறப்பு ரயில் சேவையினை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் அனைத்தும் முன்பதிவு அற்றவை ஆகும். இதில், 15 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், இரண்டு பொருட்கள் அடங்கிய பெட்டிகளும் இடம்பெரும். 

இந்த கோவை மற்றும் சென்னைக்கான சிறப்பு ரயில் சேவை நேரம் மற்றும் விபரங்கள் கீழே வருமாறு:



Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...