DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கடுமையாக கண்டித்துள்ளது. வேலைவாய்ப்பு கோரி நடத்தப்பட்ட ஜனநாயகப் போராட்டத்தை திரித்து அரசியல் செய்ய முயற்சிப்பதாக DYFI குற்றம்சாட்டியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்கு DYFI கோவை மாவட்டக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஏ.என். ராஜா மற்றும் மாவட்டச் செயலாளர் எம். தினேஷ் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பாதுகாக்க தொடர்ந்து செயல்பட்டு வரும் ஜனநாயக அமைப்புகள் மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் கண்டனத்திற்குரியவை என்று தெரிவித்துள்ளனர்.

அரசியல் சாசனத்தின் அடிப்படை விழுமியங்களை மதிக்காமல், வெறுப்புணர்வையும் காழ்ப்புணர்ச்சியையும் தூண்டும் வகையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்மையில் DYFI சார்பில் நடத்தப்பட்ட போராட்டம், ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதையும், கோவை மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நடைபெற்ற ஜனநாயகப் போராட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெற்ற போராட்டத்தை திரித்துக் கூறி, அவதூறு பரப்பும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யக் கோருவது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் DYFI தெரிவித்துள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு கேட்பது குற்றமல்ல என்றும், காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை பறிப்பதே மக்களுக்கு எதிரான செயல் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கங்களை மிரட்டல்களாலும், பொய்யான குற்றச்சாட்டுகளாலும் முடக்க முடியாது என்றும், மக்கள் நலன், சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...