பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (Recycling Textile Industries Federation) வலியுறுத்தியுள்ளது.


கோவை: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், இந்த வரிவிலக்கு உரிய காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே இந்திய ஜவுளித் தொழில்துறைக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்று மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (Recycling Textile Industries Federation - RTF) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து இந்தியாவுக்கு பருத்தி இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இறக்குமதி செய்ய வேண்டிய காலகட்டத்தில் வரிவிலக்கு வழங்கப்பட்டால் மட்டுமே அது தொழில்துறையினருக்கு பயனளிக்கும் என்றார்.

மேலும், பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரும் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியாவில் தரமான பருத்தி பற்றாக்குறை நிலவுவதால், நூற்பாலைகள் வெளிநாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அண்மைக் காலமாக பருத்தி விலை உயர்வு காரணமாக ஜவுளித் துறையின் உற்பத்திச் சங்கிலியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நிறுவனங்கள் கடனை நம்பி தொழில் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், முன்னர் 60 நாட்களுக்கு தேவையான பருத்தியை இருப்பு வைக்க போதுமான நிதி வசதிகள் இருந்த நிலையில், தற்போது கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தேவையான அளவு பருத்தியை கையிருப்பில் வைத்திருக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்த ஜெயபால், ஜவுளிப் பொருட்கள் உள்ளிட்ட பிற தொழில்துறை உற்பத்திப் பொருட்களுக்கு ஏன் இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும், பருத்திக்கான விலையை நிர்ணயிக்கும் போது தரமான பருத்திக்கு ஒரு விலையும், தரம் குறைந்த பருத்திக்கு குறைந்த விலையும் நிர்ணயிக்க வேண்டும் என்றும், அனைத்து வகை பருத்திக்கும் ஒரே விலை நிர்ணயிப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...