கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் இன்று அதிகாலை மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சமீபத்தில், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை கர்நாடக, கேரளா, ஆந்திரா பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். பேருந்துகளில் பயணித்தவர்களின் உடைமைகள், பார்சல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மோப்பநாய் உதவியுடன் பரிசோதிக்கப்பட்டன.



மேலும், நகரின் பல்வேறு பார்சல் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெளியூர்களில் இருந்து வந்த மற்றும் அனுப்பப்படவிருந்த பார்சல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

சோதனையின்போது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம், போதைப்பொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பார்சல்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும், இதுபோன்ற தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

கோவைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க இதுபோன்ற தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...