கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை மேலாண்மை, சாலை சுத்தம் ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று பல்வேறு மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.






முதலில், ராஜகோபால் லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் சிங்காநல்லூர் கூட்டுறவு நியாய விலை கடையை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு அவர் பொதுமக்களிடம் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சரியாக கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். இதில் நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






இதைத் தொடர்ந்து, ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் ஏபிசி மெட்ரிகுலேஷன் பள்ளி முன்பு சாலையோரத்தில் செடிகள் குப்பைகள் சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜூன் 4ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதால், சுத்தம் செய்யப்பட்ட செடிகள் குப்பைகள் உடனடியாக எடுத்துச் செல்லுமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் உத்தரவிட்டார்.






அதைத் தொடர்ந்து, என் ஜிஆர் வீதி மற்றும் இஎஸ்ஐ காம்பவுண்ட் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். சிறிய சாலையாக உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சுத்தம் செய்யப்பட்ட சாக்கடை மண்கள் இரண்டு நாட்களுக்குள் எடுத்துச் செல்லுமாறு வார்டு சூப்பர்வைசரிடம் கவுன்சிலர் கூறினார்.






கள்ளிமேடு வீதி பகுதியில், தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்று கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து தரும்படி அறிவுறுத்தினார்.






இறுதியாக, பி ஆர் பி கார்டன் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குப்பைகள் போட வேண்டாம் என பிளக்ஸ் வைக்குமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் கவுன்சிலர் அறிவுறுத்தினார்.


Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...